தூங்கும் நிலவின்துயில் கலைந்து...
சோக விழிகள்துயர் மறந்து...
ஏங்கும் எந்தன் இரு விழிகள்...
என்றுன் தரிசனம் காண்பதுவோ?
இரவின் நிழல் விழும் ஓரிடத்தில்..
இன்னும் காத்துக் கிடக்கின்றேன்..
வரவில் தாமதம் ஏதுமென்றால்..
வருமுன் சேதி அனுப்பாயோ?
பிள்ளைத்தமிழின் சாறெடுத்து..
பிசைந்த கவிதைத் தேன் துளிகள்..
அள்ள அள்ளக் குறையாமல்
அத்தனை அழகாய் உனை வடித்தேன்..
மெல்ல மெல்லத் திரை விலக்கி
மெதுவாய் தரிசனம் தருகின்றாய்..
எல்லை இல்லா வான்வெளியில்
இழந்த இளமையைப் பெறுகின்றாய்...
வெள்ளி, 14 நவம்பர், 2008
செவ்வாய், 11 நவம்பர், 2008
எனது கணித ஆசான்
கடலெனும் கணிதம் துளி என அருந்தி
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..
நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....
"நன்றி மறப்பது நன்றன்று"
காவியம் படைத்திட வழி சமைத்தான்.....தன்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் உருக்கி
உயிரெனும் கணிதச் சுவை அமைத்தான்..
நிகரிலா வழிகள் நிதம் நிதம் வகுத்து
நமக்கென வழங்கிய ஒரு ஆசான்....நம்
அகம் மிக மகிழ்வுற அதிசயக் கணிதத்தை
அளித்திட்ட அவனும் ஒரு ஈசன்....
"நன்றி மறப்பது நன்றன்று"
திங்கள், 10 நவம்பர், 2008
I am Harishan...
இன்னும் நிறைய இருக்கிறதே?...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
