வெள்ளி, 17 அக்டோபர், 2008

எனக்குள் எழும் கேள்வி

தூறிப் பெய்யும் மழையினிலே...
தூர எறிக்கும் வெயிலினிலே...
மாறிப் பிறக்கும் இரவினிலே...
வாசம் கொடுக்கும் மலர்களிலே...

வேறு எங்கும் காணாத
விண்மீன் திரளின் வெளிச்சத்தில்...
ஏறி நின்று பார்த்தாலும்
எங்கும் தெரிவது நீ தானே....

மாயத் திரையின் விழிப் பரப்பில்
வண்ணக் கனவின் ஒரு ஈர்ப்பில்
தோயத் தொடங்கிய என் மனதில்
தோன்றும் நாடகம் நீ தானே....

நேயக் கடலின் நீரலைக்குள்
நீந்தித் தவிக்கும் என்னுள்ளம்
தூயத் தேன்தமிழ்க் கவி வார்க்க- அங்கும்
தோன்றி மறைவது நீ தானே....

கருத்துகள் இல்லை: